Published : 16 Apr 2018 08:04 AM
Last Updated : 16 Apr 2018 08:04 AM

எம்.பி.யாக அருண் ஜேட்லி பதவியேற்பு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (65) நேற்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.

அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து ஜேட்லி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இதர எம்பிக்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்ததால் அவர்களுடன் சேர்ந்து ஜேட்லி பதவியேற்கவில்லை.

இந்நிலையில் நேற்று அவர் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதில் பாஜக மூத்த தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் பரிந்துரை கடிதத்தின்படி அந்த கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் ஜேட்லி பொறுப்பேற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x