Published : 01 Apr 2018 10:21 AM
Last Updated : 01 Apr 2018 10:21 AM

39 இந்தியர்களின் உடல்களை பெற இன்று இராக் செல்கிறார் அமைச்சர் வி.கே.சிங்

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களைப் பெறுவதற்கான சட்டநடைமுறைகள் முடிந்துவிட்டன. பாக்தாத் தூதரிடமிருந்து அழைப்பு வந்தவுடன், உடல்களை இந்தியா கொண்டுவருவதற்காக சி-17 ரக விமானத்துடன் நாங்கள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) புறப்படுவோம். பாக்தாத்தில் உடல்களை பெற்றுக்கொண்டு அமிர்தசரஸ் வருவோம். அங்கு பஞ்சாபை சே்ர்ந்த 27 பேர் மற்றும் இமாச்சலத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்படும். இதையடுத்து கொல்கத்தா சென்று 2 உடல்களை ஒப்படைப்போம். பின்னர் எஞ்சிய உடல்களை பிஹார் தலைநகர் பாட்னாவில் ஒப்படைப்போம். இவ்வாறு வி.கே.சிங் கூறினார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x