Published : 12 Mar 2018 08:38 AM
Last Updated : 12 Mar 2018 08:38 AM

3 தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக முடிந்தது

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மற்றும் பிஹாரின் அரேரியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

கோரக்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றார். இதுபோல பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானார். பின்னர் இருவரும் மாநில சட்ட மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

இதுதவிர, பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x