Published : 23 Feb 2018 08:24 AM
Last Updated : 23 Feb 2018 08:24 AM
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக்கொண்டிருந்த மேடையில் பெண் ஒருவர் ஏறி, முதல்வரை நோக்கி ஓடியதால் பரபரப்பு உருவானது.
மே.வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி மேடையில் ஏறினார். மேலும் முதல்வரை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடனே மேடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகளை கடிந்துகொண்ட மம்தா பானர்ஜி, “அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று முதலில் விசாரியுங்கள். யாரும் இந்த விதத்தில் செயல்பட்டு எதையும் சாதித்துக்கொள்ள முடியாது. மேடையில் ஒருவர் ஓடி வருவது எந்த வகையில் சரியாகும்? ஏதேனும் பிரச்சினை என்றால் எனக்கு கடிதம் எழுதினாலே போதும்” என்றார்.
பின்னர் அந்தப் பெண் கூறும்போது, “எனது தந்தையை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதை முதல்வர் மம்தாவிடம் வலியுறுத்த விரும்பினேன். இதற்கு முன் மால்டா மாவட்டத்தில் முதல்வரை சந்திக்க முயன்றேன். கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கும் சென்றேன். ஆனால் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை” என்றார். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT