Published : 23 Feb 2018 07:55 AM
Last Updated : 23 Feb 2018 07:55 AM

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைது

டெல்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த கலாச்சாரத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தம்மை தாக்கியதாக தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் போலீஸில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அமனத்துல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ், தம்மை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏ அஜய் தத், போலீஸில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்எல்ஏக்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பு டெல்லி கலாச்சாரத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்த முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த போலீஸார் கைது செய்தனர். இதேபோல், இப்போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான அல்கா லம்பாவையும் போலீஸார் கைது செய்தனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x