Published : 16 Feb 2018 12:26 PM
Last Updated : 16 Feb 2018 12:26 PM

மகிழ்ச்சியான செய்தி: காவிரி தீர்ப்புக்கு சித்தராமையா வரவேற்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என அம்மாநில முதல்வர் சித்தராமையாக கூறியுள்ளார்.

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

‘‘கர்நாடக மக்களுக்கும், காவிரி பாசன விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி இது. இரு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு’’ எனக் கூறினார்.

இதுபோலவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x