Last Updated : 14 Feb, 2018 06:10 PM

 

Published : 14 Feb 2018 06:10 PM
Last Updated : 14 Feb 2018 06:10 PM

விவசாயிகள் பிரச்சினைகளை விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் 2 நாள் கூட்டம்

 

நாட்டில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் தீர்வு காணும் வகையில் 2 நாள் தேசிய அளவிலான மாநாடு பிரதமர் மோடி தலைமையில் வரும் 19, 20-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள புசா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டை மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் துறை செயலாளர் எஸ்.கே. பட்நாயக், வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், வேளாண் ஆலோசனை மையமான சிஏசிபி, வேளாண் பல்கலைகழகங்கள், விவசாய அமைப்புகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின் முதல் நாளில் வேளாண் பிரச்சினைகள் குறித்தும், அது தொடர்பான துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் வேளாண் வல்லுநர்கள், அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பரிந்துரைகளை அடுத்த நாள் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் முன்வைக்கப்படும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை குறைந்து வருவது, குறிப்பாக பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உள்ளிட்ட வேளாண் பொருட்கள் நன்றாக கடந்த ஆண்டு விளைந்தும் உரிய விலை இல்லை. இது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் ஏற்கனவே விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகளையும், கடன் தள்ளுபடியையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளன.

மத்திய அரசும் தனது 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x