Published : 14 Feb 2018 06:09 PM
Last Updated : 14 Feb 2018 06:09 PM
காதவாலி ரெயில்நிலையத்தில் வயதான போர்ட்டரை அடித்துக்கொன்ற ஓய்வுபெற்ற கடற்படை வீரரை தானே மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
தனஞ்செய் குமார் சின்ஹா இவர் முன்னாள் கடற்படை வீரர், கானு ஜாதவ் எனும் 72 வயது முதியவர் காதவாலி ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலியாக வேலை செய்துவந்தார்.
நேற்று மாலை சுமைதூக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை வாக்குவாதம் அளவுக்குப் போனது. அதைத் தொடர்ந்து முன்னாள் கடற்படைவீரர் வயதான போர்ட்டரை அடித்துக்கொன்றார்.
அங்கு ரெயிலுக்குக் காத்திருந்த பயணிகள் போர்ட்டர் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சின்ஹாவை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தனஞ்செய் சின்ஹாமீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அவர் பிப்ரவரி 16 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனஞ்செய் சின்ஹா மற்றும் கானு ஜாதவ் இருவருமே காதவாலியைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT