Published : 14 Feb 2018 08:11 AM
Last Updated : 14 Feb 2018 08:11 AM

30 மணி நேர துப்பாக்கிச் சண்டை: காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகள் 2 பேர், 30 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவி்ல் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள கரண் நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாமின் தகவல் தொடர்பு கோபுரத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று அதிகாலை 4 மணி அளவில் 2 தீவிரவாதிகள் ஏகே 47ரக துப்பாக்கி யால் சுடத் தொடங்கினர். ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் பதிலடியை தாக்குப் பிடிக்க முடியாத தீவிரவாதிகள் அருகே உள்ள கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டிடத்துக்கு ஓடிச் சென்று பதுங்கினர். அந்தக் கட்டிடத்தைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் இறந்தார். சிறப்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். தீவிரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே 30 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஒரு தீவிர வாதி கட்டிடத்தை விட்டு வெளியே வந்து மற்றொரு இடத்துக்கு தப்பி ஓடும்போது கொல்லப்பட்டார். கட்டிடத்திலேயே பதுங்கியிருந்த மற்றொரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த தீவிரவாதியும் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளையும் அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x