Published : 14 Feb 2018 07:35 AM
Last Updated : 14 Feb 2018 07:35 AM

பேராசிரியர் பணியிட ஒதுக்கீடு: பூவா, தலையா போட்டு முடிவு செய்த அமைச்சர்

பஞ்சாப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அந்த மாநில அரசு தேர்வாணையம் அண்மையில் போட்டித் தேர்வை நடத்தியது. இதில் 37 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு சண்டிகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மாநில தொழில் கல்வித் துறை அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி முன்னிலையில் நடந்தது.

அப்போது 2 பேர் ஒரே தகுதியுடன் பாட்டியாலாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இருவரும் பிடிவாதமாக இருந்ததால் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, நாணயத்தை சுண்டிவிட்டு பூவா, தலையா மூலம் இறுதி முடிவெடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, “பணியிட ஒதுக்கீட்டில் பிரச்சினை எழுந்தபோது வெளிப்படைத் தன்மையுடன்பூவா, தலையா போட்டு அமைச் சர் முடிவு செய்துள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x