Last Updated : 13 Feb, 2018 05:52 PM

 

Published : 13 Feb 2018 05:52 PM
Last Updated : 13 Feb 2018 05:52 PM

சட்டீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் கைது

சட்டீஸ்கர் மாநிலத்தில் 3 மாவோயிஸ்டு தீவிரவாதிகளை இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையினர் இன்று கைது செய்தனர்.

இதுகுறித்து கொண்டாகான் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஹேஸ்வர் நாக் தெரிவிக்கையில்,

இந்தோ திபெத்திய எல்லை பாதுகாவல் படையும் மற்றும் மாவட்ட காவல்படையும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது மார்டாபால் காவல்நிலைய எல்லைக்குள் உள்ள காட்டில் ஆக்லி ஆற்றின் அருகே மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நில்தார் என்கிற குட்டு (25),  மாவோயிஸ்டுகளின் லோக்கல் ஆர்கனைசேஷன் ஸ்வாடில் உறுப்பினராக இருப்பவர். மற்றவர்கள் கின்னு (25), மற்றும் காசுரம் (30) ஆகிய இருவரும் மாவோயிஸ்டுகளின் இன்னொரு பிரிவான ஜான்மிலிடியா உறுப்பினர்கள்.

குட்டு என்பவரின் தலைக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இரு ஜான்மிலிடியா மாவோயிஸ்டுகளிடமிருந்து அவர்கள் வைத்திருந்த 8 கிலோ டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, மாவோஸிஸ்ட் பேனர்கள், இலக்கிய புத்தகங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

அவர்களை விசாரித்ததில் பாதுகாப்புப் படைகளை இலக்காகக்கொண்டு இந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

இந்த மூவரும் காவல்துறையினரின் விருந்துநிகழ்ச்சிகளின்போது அங்கே கண்ணிவெடிகளை புதைத்துவைத்து தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு கொண்டாகான் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x