Last Updated : 10 Feb, 2018 07:10 AM

 

Published : 10 Feb 2018 07:10 AM
Last Updated : 10 Feb 2018 07:10 AM

பெங்களூருவில் மதிய உணவு ஊழியர்கள் போராட்டம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

கர்நாடகாவில் சுமார் 48,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 1.18 லட்சம் மதிய உணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதிய உணவு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் கர்நாடக தலைமைச் செயலகத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, போராட்டக்காரர்களுடன் அரசு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x