Published : 15 Jan 2018 07:55 PM
Last Updated : 15 Jan 2018 07:55 PM

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா தலைமறைவு: 4 தனிப்படை அமைத்து போலீஸ் தேடல்

 

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா தலைமறைவாயிருப்பதாகவும் அவரைக் கண்டுபிடிக்க 4 குழு கொண்ட போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அகமதாபாத் போலீஸ் இணை ஆணையர் ஜே.கே.பட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை குஜராத் போலீஸோ, ராஜஸ்தான் போலீஸோ கைது செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறோம். இன்று காலை 10.45 மணியளவில் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் சென்றார்” என்றார் காவல்துறை இணை ஆணையர் பட். இஸட் பிளஸ் பாதுகாப்பு உடைய தொகாடியா, இன்று காலை பாதுகாப்பைத் துறந்து தாடி வைத்த ஒருநபருடன் சென்றதாகத் தெரிகிறது.

“இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து ராஜஸ்தான் போலீஸ் குழு ஆமதாபாத் வந்தனர். நாங்கள் அவர்களை தொகாடியா இல்லத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம். பிறகு அலுவலகத்துக்கும் சென்றோம் ஆனால் அவர் அங்கெல்லாம் இல்லை” என்றார் பட்.

இதற்கிடையே தொகாடியா கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவ விஎச்பி தொண்டர்கள் சோலா காவல்நிலையத்தில் கூடி நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளனர்.

கொலை முயற்சி வழக்கில் இவருக்கு ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x