Published : 15 Jan 2018 05:59 PM
Last Updated : 15 Jan 2018 05:59 PM
ஜூலை 1, 2018 முதல் ஆதாரில் முக அடையாளத்தையும் சரிபார்க்கும் தெரிவை ஆதார் ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
பயோமெட்ரிக் தரவுகள் தவறாக உள்ளதாக சிலபல புகார்கள் எழுந்ததையடுத்தும், மூத்த குடிமக்களின் விரல் ரேகை தேயும் காரணம் இருப்பதாலும் முக அடையாளத்தை வைத்துச் சரிபார்க்கும் தெரிவு அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் முக அடையாள சரிபார்ப்பு தெரிவை இன்னொரு அடையாளத்துடன் சேர்த்தே சரிபார்க்க அனுமதிக்கப்படும் அதாவது பயோமெட்ரிக்ஸ் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒன் டைம் பாஸ்வேர்ட் மூலம் சரிபார்க்க அனுமதிக்கப்படும்.
இந்த புதிய சரிபார்க்கும் தெரிவு குறித்த விரிவான விவரங்களை மார்ச் 1-ம் தேதி ஆதார் ஆணையம் வெளியிடுகிறது.
ஆதார் ஆணைய தகவல்களின்படி, 1,510 கோடிக்குற்பட்ட அங்கீகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதில் 1045 கோடி பயோமெட்ரிக் அங்கீகாரங்களே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT