Published : 12 Jan 2018 09:39 AM
Last Updated : 12 Jan 2018 09:39 AM

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இருவர் பரிந்துரை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரின் பெயர் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

கே.எம்.ஜோசப் 2004-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு 2014-ல் அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்து மல்ஹோத்ரா 2007-ல் மூத்த வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார். இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெறவுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரே பெண் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி இருந்து வருகிறார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x