Published : 17 Dec 2017 11:16 AM
Last Updated : 17 Dec 2017 11:16 AM

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் உள்பட 5 நக்சலைட்கள் போலீஸில் நேற்று சரணடைந்தனர்.

சொன்சாய் கொராம், ஹிராலா நேத்தாம், பீர்சாய் கொராம், பிலுராம் காஷ்யப், பெண் நக்சல் சோன்பதி காஷ்யப் ஆகிய 5 பேரும் பல வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் அனைவரும் நக்சல் இயக்கம் மீதான அதிருப்தியில், கொண்டகோன் மாவட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். அனைவருக்கும் நக்சல் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படும் என்று ஏஎஸ்பி மகேஸ்வர் நாக் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x