Published : 17 Dec 2017 10:55 AM
Last Updated : 17 Dec 2017 10:55 AM

ராகுல் காந்தி தலைமையில் காங். உச்சத்தைத் தொடும்: மன்மோகன் சிங் நம்பிக்கை

‘‘ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சங்களைத் தொடும்’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், அவரை வாழ்த்தி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பேசியதாவது:

தற்போது கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ராகுல் காந்தியிடம் சோனியாஜி ஒப்படைத்திருக்கிறார். கடந்த 19 ஆண்டுகளாக கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்த சோனியாஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு என் வணக்கத்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சங்களைத் தொடும். அவருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலில் சில இடையூறுகள் நிலவுவதைக் காண முடிகிறது. இந்தவேளையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ராகுல் ஏற்றுள்ளார். அரசியல் நம்பிக்கையின் மீது அரசியல் பயம் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது. இந்த நிலையை மாற்றி அரசியல் நம்பிக்கையை நிலைநாட்ட உங்களை நாங்கள் சார்ந்திருக்கிறோம்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x