Last Updated : 30 Nov, 2017 12:14 PM

 

Published : 30 Nov 2017 12:14 PM
Last Updated : 30 Nov 2017 12:14 PM

சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்க எந்த அரசியல் விலையையும் கொடுப்பேன்: மோடி

சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக எந்த அரசியல் விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதிலிருந்து ஒரு நாளும் பின்வாங்க மாட்டேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை சார்பில் நடைபெறும் ‘தலைமை’ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, ''வளர்ச்சியை மையப்படுத்தியே எனது அரசு செயல்படும். அதில் ஊழல் இருக்காது. குடிமகன்களை மையப்படுத்திய ஆட்சியாக இருக்கும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கறுப்புப் பணம் சார்ந்த பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த இந்தியாவை உருவாக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக எந்த அரசியல் விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளேன். அதிலிருந்து ஒரு நாளும் பின்வாங்க மாட்டேன்.

ஆதாரின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன். பினாமி சொத்துகளைக் கண்காணிக்கவும், திருட்டுகளைச் சோதனை செய்யவும் ஆதார் மாபெரும் பங்கு வகிக்கிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x