Published : 27 Nov 2017 08:47 AM
Last Updated : 27 Nov 2017 08:47 AM
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர், கடல் வழியாக கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பைக்குள் ஊடுருவினர். தாஜ் ஓட்டல், மும்பை ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப் பின்னர் நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் 18 போலீஸார், 2 கமாண்டோக்கள் உட்பட 166 பேர் பலியாயினர். 239 பேர் காயம் அடைந்தனர். அந்த சம்பவத்தின் 9-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் நினைவிடத்தில் ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டிஜிபி சதீஷ் மாத்தூர், மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சால்கிகர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT