Published : 27 Nov 2017 06:45 AM
Last Updated : 27 Nov 2017 06:45 AM

3 நாள் பயணமாக அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றார்: 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டு சென்றார்.

ரஷ்யாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். ரஷ்யாவின் உள்துறை அமைச்சர் விளாடிமிர் கோலோகோல்ட்செவ் மற்றும் அந்நாட்டின் மூத்த அரசு நிர்வாகிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசிக்கிறார். சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடக்கின் றன.

இந்த பயணத்தின்போது இந்தியா - ரஷ்யா இடையே எல்லா வகையிலும் தீவிரவாதத்தை சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு, போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க கூட்டாக நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து 2 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் தீவிரவாத ஒழிப்புக்கான தகவல்களை பரிமாறிக் கொள்வது, தீவிரவாதிகளின் சதி திட்டங்களை கண்டறிவது, பாதுகாப்பை பலப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட ஒப்பந்தம் வகை செய்யும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x