Published : 26 Nov 2017 10:24 AM
Last Updated : 26 Nov 2017 10:24 AM

கர்நாடகாவில் சாலை விபத்தில் 6 பேர் பலி

கர்நாடகாவின் சித்ரதுர்கா அருகே காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நேற்று இறந்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த போராப்பா (35) என்பவர் நேற்று குடும்பத்தினருடன் காரில் பெங்களூரு வந்து கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் அருகே வரும்போது, திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே, பெங்களூருவில் இருந்து சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியது. நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை போலீஸார் மீட்டு, சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஹிரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x