Last Updated : 21 Nov, 2017 06:07 PM

 

Published : 21 Nov 2017 06:07 PM
Last Updated : 21 Nov 2017 06:07 PM

திரிபுராவில் பத்திரிகையாளர் சுதிப் தத்தா சுட்டுக்கொலை

திரிபுரா பத்திரிகையாளருக்கும் அம்மாநில ஆயுதப் படை வீரருக்கும் தகராறு முற்றிய நிலையில், பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''திரிபுரா ராஷ்ட்ரிய ரைபிள் படையின் இரண்டாவது பட்டாலியன் கமாண்டரின் பாதுகாவலர் தப்பான் டெபர்மா. இவருக்கும் திரிபுரா பத்திரிகையாளர் சுதிப் தத்தா பெளமிக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் 'ஸ்யந்தன் பத்திரிகா' நிருபரான சுதிப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரின் உடல் கோவிந்த பந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் திரிபுராவின் போத்ஜங் நகரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

முன்னதாக செப்டம்பர் 20-ம் தேதியன்று, இங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள மண்டாய் பகுதியில் தொலைக்காட்சி நிருபர் சாந்தனு பெளமிக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x