Published : 14 Oct 2017 09:56 AM
Last Updated : 14 Oct 2017 09:56 AM

இணையத்தில் எந்த வகையில் வந்தாலும் ப்ளூவேல் விளையாட்டை தடுக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. இதையடுத்து ப்ளூவேல் விளையாட்டுக்கான எல்லா ‘லிங்க்’கையும் தடை செய்யும்படி பேஸ்புக், கூகுள், யாகூ போன்ற நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட்டது.

எனினும், வேறு லிங்க்குகள் மூலம் ப்ளூவேல் விளையாட்டு இணையதளத்தில் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ‘‘இணையத்தில் ப்ளூவேல் விளையாட்டு எந்த வகையில் வந்தாலும் அதை கண்காணித்து தடுக்க (பயர்வால்) வேண்டும். அதை உருவாக்குவதற்கு நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு இருப்பதால், இதுதொடர்பான வேறு வழக்குகளை நாட்டில் உள்ள எல்லா உயர் நீதிமன்றங்களும் அனுமதிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x