Published : 23 Sep 2017 09:44 AM
Last Updated : 23 Sep 2017 09:44 AM

பசு குண்டர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுமாநில அரசின் கடமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பசு குண்டர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மாநில அரசுகளின் கடமை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அண்மைக் காலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பிரிவினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிடும்போது, “பசு பாதுகாப்பு குழுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, “வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ வழக்கு மற்றும் அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்” என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது, “பசு பாதுகாப்பு குழுக்களின் வன்முறையை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். குற்றச் செயல்களால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு திட்டம் வைத்திருப்பது, குற்றவியல் நடைமுறை சட்டப்படி மாநில அரசுகளின் கடமையாகும். இதுவரை திட்டம் ஏதுமில்லை என்றால் புதிதாக வகுக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x