Published : 23 Sep 2017 09:41 AM
Last Updated : 23 Sep 2017 09:41 AM

இந்தியாவில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டுள்ள கல்வரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

முழுவதும் இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் கல்வரி, கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) கோஷத்தின்படி முழுவதும் இந்தியாவிலேயே ஐஎன்எஸ் கல்வரி நீர்மூழ்கி போர்க்கப்பல் (ஆழ்கடல் டைகர் சுறா) தயாரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் கூட்டாக இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் ரூ.350 கோடியில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. முதலாவது கப்பல் 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கல்வரி என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் படையில் சேர்ப்பதற்காக வியாழக்கிழமை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போர்க்கப்பல் 66 மீட்டர் நீளம் உள்ளது, 300 மீட்டர் ஆழத்தில் செல்லக்கூடியது. எதிரிகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. விரைவில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் 2020-க்குள் கட்டி முடிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x