Published : 23 Sep 2017 09:38 AM
Last Updated : 23 Sep 2017 09:38 AM

எங்கள் வீரர்கள் இறந்தால் ராணுவம் பதிலடி கொடுக்கும்: பாகிஸ்தானிடம் இந்தியா திட்டவட்டம்

இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் நேற்று தொலைபேசி மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ மேஜர் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சாவிடம் பேசினார். அப்போது அவர், “எல்லையில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவது தொடர்கிறது. இந்திய வீரர்கள் உயிரிழக்க நேரும் எந்தவொரு சம்பவத்துக்கும் தகுந்த பதிலடி கொடுப்பது இந்திய ராணுவத்தின் உரிமை. எல்லையில் அமைதியை பராமரிக்கவே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தான் தரப்பிலும் இதற்கான முயற்சி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்” என்றார்.

எல்லையில் பாகிஸ்தான் மக்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதவதாக பாகிஸ்தான் கூறுகிறது. இப்புகாரை தெரிவிக்கவே மிர்சா நேற்று ஏ.கே.பட்டை தொலைபேசியில் அழைத்தார். அப்போது ஏ.கே.பட் மேற்கண்ட பதிலை அளித்தார். “அப்பாவி மக்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குவதில்லை, அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நிலைகளுக்கு அருகில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கு எதிராகவே பிஎஸ்எப் தாக்குதல் தொடங்கியது” என்றும் பதில் அளித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x