Published : 23 Sep 2017 09:36 AM
Last Updated : 23 Sep 2017 09:36 AM

திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்ட பின்னர், பெரிய சேஷ வாகன சேவை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 24-ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 25-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 26-ம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

5-ம் நாளான 27-ம் தேதி காலை மோகினி அவதாரமும், இரவு கருட சேவையும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை ஹனுமன் வாகனம், மாலை தங்க தேரோட்டம், இரவு கஜ வாகனம், 29-ம் தேதி காலை சூர்ய பிரபை, இரவு சந்திர பிரபை, 30-ம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது. நிறைவு நாளான அக்டோபர் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து விழா நிறைவுபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x