Published : 19 Sep 2017 02:37 PM
Last Updated : 19 Sep 2017 02:37 PM
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சகிப்பின்மையும் வேலைவாய்ப்பின்மையுமே முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் வாஷிங்டனில் இந்திய, தெற்காசிய நிபுணர்களுடனான வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சகிப்பின்மையும் வேலைவாய்ப்பின்மையுமே முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன. அரசாங்கத்தால் இந்தியாவில் வேலைகளை உருவாக்க முடியவில்லை. இது நாட்டை அபாயகரமான நிலைக்கு இட்டுச் செல்லும்'' என்றார்.
வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழுவினருடன் கலந்தாலோசித்த ராகுல், சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்துவரும் சகிப்பின்மை குறித்து வருத்தம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT