Published : 14 Sep 2017 08:19 AM
Last Updated : 14 Sep 2017 08:19 AM

திருப்பதியில் செம்மரம் கடத்தியவர் கைது

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள மேகலகுண்டா எனும் இடத்தில் வன அதிகாரி ரகுநாத் தலைமையிலான அதிரடிப் படையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸை பார்த்ததும் அந்த கும்பல் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அனைவரும் வனப்பகுதிக்குள் ஓடி விட்டனர். எனினும் ஒருவர் மட்டும் சிக்கினார்.

அவர் திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் சேட்டு என தெரிய வந்தது. அங்கிருந்த 23 செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர். போலீஸார் தனிப்படை அமைத்து வனப்பகுதியில் மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x