Published : 12 Sep 2017 08:05 AM
Last Updated : 12 Sep 2017 08:05 AM
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்தில் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. அவர்கள் நேற்று 58-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார், அய்யாக்கண்ணு உட்பட 28 விவசாயிகளை கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கைது செய்யவில்லை. எதற்காக விவசாயிகளை கைது செய்தனர் என்ற காரணத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT