Published : 31 Oct 2014 12:58 PM
Last Updated : 31 Oct 2014 12:58 PM
குளிர்காலம் நெருங்குவதையொட்டி, உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஸ்தான், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வீடு இல்லோதவர்களுக்காக குளிர்கால பாதுகாப்புக் கூடங்களை உடனடியாக ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஸ்தான், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவும். கடந்த ஆண்டு குளிர் காலத்தில் இம்மாநிலங்களில் பாதுகாப்பான இடங்களில் வசிக்காத பலர் குளிருக்கு பலியாகினர்.
இந்நிலையில், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் குளிர்கால பாதுகாப்பகங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்படுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT