Last Updated : 28 Jun, 2016 12:36 PM

 

Published : 28 Jun 2016 12:36 PM
Last Updated : 28 Jun 2016 12:36 PM

42 அத்தியாவசிய மருந்துகளின் விலை 15% குறைப்பு: வெங்கய்ய நாயுடு தகவல்

மத்திய அரசின் மருந்து கட்டுப் பாட்டுத் துறை 42 முக்கிய மருந்து களுக்கு உச்சபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இதனால் இவற்றின் விலை 15% அளவுக்குக் குறையும்.

காச நோய், புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா, வலிப்பு, முடக்கு வாதம், மன அழுத்தம் போன்ற முக்கிய நோய்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய மருந்து களின் விலையை தேசிய பார்மசூடிக் கல் விலைக் கட்டுப்பாட்டு ஆணை யம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. 45 மூலக்கூறு மருந்துக் கலவை களான இவை பிரிவு-1 மருந்து பட்டியலில் வருகிறது. இவற்றின் உச்சபட்ச விலையை மருத்துக் கட்டுப்பாட்டு சட்டம் 2016-ன் படி நிர்ணயித்துள்ளது.

இந்த 45 மூலக்கூறு மருந்துக் கலவைகளில் உருவாகும் 42 மருந்துகளின் விலைகள் 15 சதவீத அளவுக்குக் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச விலைக்கு விற்காத நிறுவனங்கள் விற்பனையாகும் விலைக்கும், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் இடையிலான உயர்வுத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும். இதற்கு மருத்துக் கட்டுப்பாட்டு சட்டம் 2013 வழிவகை செய்கிறது.

என்பிபிஏ வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிக்கையில் நரம்பு மூலம் செலுத்தும் 32 மருந்துகளின் விலையை திருத்தம் செய்து உச்ச பட்ச விலையை நிர்ணயம் செய்துள் ளது. பொதுவாக மருந்துகளின் விலையை ஆண்டுக்கு அதிகபட்சம் 10% அளவுக்கு உயர்த்த அனுமதிக் கப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x