Published : 17 Oct 2014 11:56 AM
Last Updated : 17 Oct 2014 11:56 AM

ராமநாதபுரம் சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார்

ராமநாதபுரம் சம்பவத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்த சையது முகமது என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர் ராஜாராமன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘இதுபோன்ற காவல் நிலைய மரணங் கள் நடக்கும்போது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் எம்.என்.வெங்கடாசலய்யா குழு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடந்துள்ள சம்பவத்துக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x