Last Updated : 11 Mar, 2017 09:24 PM

 

Published : 11 Mar 2017 09:24 PM
Last Updated : 11 Mar 2017 09:24 PM

ராகுல் பதவி விலகும் பேச்சுக்கு இடமில்லை: திக்விஜய் சிங் கருத்து

உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

உ.பி., உத்தராகண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சித் தலைமையில் மாற்றம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு திக்விஜய் சிங் கூறும்போது, ''ராகுல் காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியில் பிணைப்பு ஏற்படுத்தும் மிகப்பெரிய சக்தியாக நேரு-காந்தி குடும்பம் உள்ளது. கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் காந்தியிடம் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் பிராந்திய தலைவர்களை உருவாக்குவது அவசியம். மாநிலங்களில் புதிய தலைமையை உருவாக்குவது அவசியம் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். வலுவான பிராந்திய தலைவர்கள் இல்லாத மாநிலங்களில் கட்சியை வளர்க்க உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டியுள்ளது'' என்றார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x