Published : 29 May 2017 06:47 PM
Last Updated : 29 May 2017 06:47 PM

மாட்டிறைச்சி விற்பனை அரசாணையிலிருந்து எருமை மாட்டிற்கு மட்டும் விலக்கு: மத்திய அரசு பரிசீலனை

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மாட்டிறைச்சியில் 90 சதவீதத்திற்கும் மேல் எருமை மாடுகளிடமிருந்து தான் வருகிறது. மேலும் பல்வேறு சமூக மக்களின் சடங்குகளிலும் எருமை மாட்டை பலியிடும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய அரசாணை மூலம் எருமை மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எருமை மாட்டை மட்டும் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்துள்ளது.இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x