Published : 24 Mar 2016 08:04 AM
Last Updated : 24 Mar 2016 08:04 AM
மறைந்த கேரள நடிகர் கலாபவன் மணியின் மரணத்துக்கு கல்லீரல் பாதிப்பே காரணம் என பிரேதப் பரி சோதனை அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாக போலீஸார் தெரி வித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாள திரைப் படங்களில் நடித்து தனிக்கென தனி முத்திரை பதித்த நடிகர் கலாபவன் மணி கடந்த 6-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததாக சமீபத்தில் வெளி யான பிரேதப் பரிசோதனை அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் சந்தேகத் துக்கு இடமான வகையில் எந்த வொரு ஆதாரங்களும் இதுவரை போலீஸாருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரேதப் பரிசோ தனை அறிக்கையின் முழு விவரங் களும் நேற்று போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக் கையில் கல்லீரல் மற்றும் உள் ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் மரணம் நேர்ந்ததாக குறிப்பிடப்பட் டுள்ளது. மேலும் அவரது மரணத் துக்கு உடலில் கலந்திருந்த பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மெத்தனால் என்ற ரசாயன பொருள் காரணம் அல்ல என்றும், அவர் சாப்பிட்ட எந்தவொரு உணவுப்பொருளிலும் இவை கலக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது மரணம் இயற்கையானதா என்பதை ஊர்ஜிதப்படுத்த உடல் உள்ளுறுப்பு களையும் ரத்த மாதிரிகளையும் ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் பரிசோதனை கூடத் துக்கு அனுப்பி வைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT