Published : 14 May 2015 08:13 AM
Last Updated : 14 May 2015 08:13 AM
குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் அச்சல் குமார் ஜோதி (62) புதிய தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இவர் நீடிப்பார்.
இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புதிய ஆணையராக அச்சல் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்” என்றார்.
1975-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற அச்சல் குமார், பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இறுதியாக, நரேந்திர மோடி முதல்வராக பதவி வகித்த போது குஜராத் மாநில தலைமைச் செயலாளராக இருந்தார். பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார்.
தலைமை தேர்தல் ஆணைய ராக இருந்த வி.எஸ்.சம்பத் கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றதை யடுத்து, ஆணையராக இருந்த எச்.எஸ்.பிரம்மா தலைமை தேர்தல் ஆணையரானார். அவரும் ஓய்வு பெற்றதையடுத்து, ஆணையராக இருந்த நசிம் ஜைதிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2 ஆணையர் பதவியும் காலியாக இருந்தது. இப்போது, அச்சல் குமார் ஆணையராக பொறுப்பேற்றதை யடுத்து இன்னும் ஒர் ஆணையர் பதவி காலியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT