Last Updated : 08 Nov, 2015 10:06 AM

 

Published : 08 Nov 2015 10:06 AM
Last Updated : 08 Nov 2015 10:06 AM

பிஹார் தேர்தலில் லாலுவின் இரு மகன்களுக்கும் பின்னடைவு

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட லாலுவின் இரு மகன்களும் பின்தங்கி உள்ளனர்.

சகோதரர்களான தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் முறையே பிஹாரின் மஹுவா மற்றும் ரகோபூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் ரகோபூர், இவர்களது தாயும் பிஹாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி நான்கு முறை போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும்.

இதில், காலை எட்டு மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கையில் இளையவரான தேஜஸ்வீ மட்டும் முன்னணி வகித்து வந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வேட்பாளருக்கு தேஜஸ்வீயை விட குறைவான வாக்குகள் கிடைத்து வந்தன.

ஆனால், காலை 9.30 மணிக்கு மேலான வாக்கு எண்ணிக்கையின் நிலையில் லாலுவின் இருமகன்களுக்குமே பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x