Published : 11 Mar 2017 03:53 PM
Last Updated : 11 Mar 2017 03:53 PM
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில்,, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் மம்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில், "5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது விருப்படி தேர்வு செய்த வாக்காளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். ஜனநாயக நாட்டில் சிலர் வெற்றி பெறுவர், சிலர் தோல்வி அடைவர் நாம் இருவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். மக்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்"என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT