Published : 29 Mar 2017 08:25 AM
Last Updated : 29 Mar 2017 08:25 AM

திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்ட ரூ.13 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் மீண்டும் கடிதம்

உண்டியலில் பக்தர்கள் காணிக் கையாக செலுத்திய ரூ.13 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். எனினும், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 வரை வங்கிகளில் டெபாசிட்ட செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இந்த ரூபாய் நோட்டுகள் எங்கும் செல்லுபடியாகவில்லை.

இந்நிலையில், பக்தர்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை திருப்பதி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரையில் உண்டியலில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு ரூ.12.7 கோடி.

காணிக்கையாக செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் 3 முறை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியது. இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் 4-வது முறையாக மீண்டும் இதே கோரிக்கையை முன்வைத்து ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x