Last Updated : 04 Jul, 2017 06:06 PM

 

Published : 04 Jul 2017 06:06 PM
Last Updated : 04 Jul 2017 06:06 PM

தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்

நசீம் சைதிக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.

அச்சல் குமார் ஜோதி 1975-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். 2013-ல் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.

இந்நிலையில் அச்சல் குமார் ஜோதி ஜூலை 6-ம் தேதி பதவியேற்கிறார். ஜூலை 5-ம் தேதி சைதி பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

அச்சல் குமார் ஜோதி மே 8, 2015-ல் 3 உறுப்பினர் தேர்தல் குழுவில் தேர்தல் ஆணையராக இணைந்தார்.

ஒரு தலைமத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் பதவிக்காலம் ஒன்று 6 ஆண்டுகள் இருக்கலாம் அல்லது 65 வயது வரை இருக்கலாம், இரண்டில் எது முன்பாக வருகிறதோ அதுவரை நீடிக்கலாம்.

நாட்டின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராகும் அச்சல் குமார் ஜோதி, குஜராத் விஜிலன்ஸ் கமிஷனராகவும், மேலும் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கண்ட்லா துறைமுகத்தின் சேர்மனாக 1999-2004-ல் பணியாற்றியுள்ளார். சர்தார் சரோவர் நர்மதா நிகாமின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் தொழிற்துறை, வருவாய், நீர் விநியோகம் ஆகிய துறைகளில் மாநில அளவில் செயலாளராக இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x