Published : 04 Jul 2017 06:06 PM
Last Updated : 04 Jul 2017 06:06 PM
நசீம் சைதிக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.
அச்சல் குமார் ஜோதி 1975-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். 2013-ல் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
இந்நிலையில் அச்சல் குமார் ஜோதி ஜூலை 6-ம் தேதி பதவியேற்கிறார். ஜூலை 5-ம் தேதி சைதி பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
அச்சல் குமார் ஜோதி மே 8, 2015-ல் 3 உறுப்பினர் தேர்தல் குழுவில் தேர்தல் ஆணையராக இணைந்தார்.
ஒரு தலைமத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் பதவிக்காலம் ஒன்று 6 ஆண்டுகள் இருக்கலாம் அல்லது 65 வயது வரை இருக்கலாம், இரண்டில் எது முன்பாக வருகிறதோ அதுவரை நீடிக்கலாம்.
நாட்டின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராகும் அச்சல் குமார் ஜோதி, குஜராத் விஜிலன்ஸ் கமிஷனராகவும், மேலும் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கண்ட்லா துறைமுகத்தின் சேர்மனாக 1999-2004-ல் பணியாற்றியுள்ளார். சர்தார் சரோவர் நர்மதா நிகாமின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் தொழிற்துறை, வருவாய், நீர் விநியோகம் ஆகிய துறைகளில் மாநில அளவில் செயலாளராக இருந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT