Published : 15 Jan 2015 11:20 AM
Last Updated : 15 Jan 2015 11:20 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சொத்துகளை மதிப்பீடு செய்தவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. மாறாக அதன் ரசீதுகளை கிழித்துப் போட்டது ஏன் என்று அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத் துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், மூத்த வழக்கறிஞர் பி.குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆஜராகினர். வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் மூன்றாவது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் வாதிட்டதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட 2 குழுக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அமைத்தனர். இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கதவு எண் 31 மற்றும் 36 போயஸ் கார்டன் வீடு, அதிலிருந்த அலங் காரப் பொருட்கள், மின் சாதனங் கள், சலவை கற்களை மதிப்பீடு செய்தனர்.
இதேபோல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா கட்டிடத்தையும், அங் குள்ள பொருட்களையும் மதிப்பீடு செய்தனர். இந்த இரு சொத்துகளும் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ளவை என்று கூறியுள்ளனர். ஆனால் இதற்காக எத்தகைய ஆதாரங் களையும் தாக்கல் செய்யவில்லை. அப்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு, பொருட்களின் விலைப் பட்டியலை தோராயமாக தயாரித் துள்ளனர்.
இதற்கான ஆதாரத்தை மதிப் பீட்டுக் குழுவில் இடம்பெற்ற பொறியாளர்கள் செந்தில், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோ ரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, “பொருட்களின் விலை தொடர்பாக பெறப்பட்ட ரசீதுகளை கிழித்துப் போட்டதாக தெரிவித் துள்ளனர். உண்மையான ஆதாரத் துடன் மதிப்பை நிரூபிக்க வேண்டிய ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?
போயஸ் கார்டன் வீடு, ஹைதாரபாத் திராட்சை தோட்டம் தொடர்பான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர் பாக ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதை வருமானவரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு சான்று அளித் துள்ளது.
வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது, அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதனை கவனத்தில் கொள்ளாதது ஏனோ தெரிய வில்லை. இவ்வாறு நாகேஸ்வர ராவ் வாதிட்டார்.
பொங்கல் விடுமுறை
இதையடுத்து ஜெயலலிதா தரப்பு மற்றொரு வழக்கறிஞர் பி.குமார், “பொங்கல் திருநாளை யொட்டி வியாழக்கிழமை நீதி மன்றத்துக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னைக்கு செல்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT