Published : 07 Oct 2014 01:35 PM
Last Updated : 07 Oct 2014 01:35 PM

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

| ராம் ஜெத்மலானி, பவானி சிங் ஆகியோரது வாதம் உள்ளிட்ட தகவலுக்கு படிக்க:> ஜெ. ஜாமீன் மனு மீது விசாரணை: ராம் ஜெத் மலானி, பவானி சிங் வாதம் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x