Last Updated : 15 Apr, 2017 08:05 AM

 

Published : 15 Apr 2017 08:05 AM
Last Updated : 15 Apr 2017 08:05 AM

ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகளால் 12 வாகனங்கள் தீக்கிரை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 12 வாகனங்கள் மாவோ யிஸ்ட்டுகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலமாவு மாவட்டத்தில் உள்ள சரைய்யா கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டர்கள் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அங்கு வந்த மாவோயிஸ்ட்களின் கொரில்லா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரு ஜே.சி.பி. இயந்திரம், 11 டிராக்டர்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்து விட்டு தப்பியோவிட்டனர்.

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மாவோயிஸ்ட்டுகள் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் இந்தத் துணிகரச் செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டு இதுவரை பல்வேறு நிகழ்வுகளில் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாவோயிஸ்ட்டுகள் தீக்கிரையாக்கி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பைபிரா பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x