Last Updated : 17 Oct, 2014 11:38 AM

 

Published : 17 Oct 2014 11:38 AM
Last Updated : 17 Oct 2014 11:38 AM

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி கைது: பாக். ராணுவம் மீண்டும் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆரிப் மக்ரே (எ) சுஜீ என்பவரை கைது செய்துள்ளோம். இவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் இதற்கு முன்பு பாதுகாப்புப் படையினர் மீதும், அப்பாவி மக்கள் மீதும் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

ஜம்முவில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் ஹமிர்புரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அதே வகை ஆயுதங்களைக் கொண்டு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே காலை 9.55 தொடங்கிய இந்த தாக்குதல் 10.30 வரை நீடித்தது.முன்னதாக, வியாழக்கிழமையும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டை சுமார் 2 மணி நேரம் நீடித்தது என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x