Last Updated : 18 Aug, 2016 09:31 AM

 

Published : 18 Aug 2016 09:31 AM
Last Updated : 18 Aug 2016 09:31 AM

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சரித்திரம் படைத்துள்ளார் சாக்‌ஷி மாலிக். வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பதிந்த மற்றொரு ட்வீட்டில், "ரக்‌ஷா பந்தன் எனும் இப்புனித நாளில் இந்தியாவின் மகள் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

காலிறுதியில் சாக்‌ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x