Published : 11 Mar 2017 08:10 PM
Last Updated : 11 Mar 2017 08:10 PM

எதிர்காலத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ்

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததில் வருத்தம் இல்லை. எங்களது கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராம் நாயக்கிடம் அளித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அகிலேஷ் கூறுகையில், ''காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததில் வருத்தம் இல்லை. எங்களது கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டை புறந்தள்ள முடியாது.

உத்தரப் பிரதேசத்தில் மக்களை மிரட்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றே கருதுகிறேன். கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி நடத்த வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சைக்கிளின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தொடர்ந்து சைக்கிள் ஓடும்'' என்றார் அகிலேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x