Last Updated : 01 Oct, 2014 02:17 PM

 

Published : 01 Oct 2014 02:17 PM
Last Updated : 01 Oct 2014 02:17 PM

உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

உத்திரப் பிரதேசத்தில் கிரிஷாக் எக்ஸ்பிரஸுடன் பரூனி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு வாரணாசியில் இருந்து கோரக்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்று கொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலும் கோரக்பூரில் இருந்து 7 கி.மி. தொலைவில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்துக்கு 12 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x