Published : 11 Mar 2017 11:33 AM
Last Updated : 11 Mar 2017 11:33 AM
உத்தரப் பிரதேச தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம் சொல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷக் மனு சிங்வி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக 307 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாடி - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 72 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக இமாலய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "உத்தரப் பிரதேச தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம் சொல்வது ஏன்? நிச்சயம் ராகுல் தனது நெஞ்சில் பாய்ந்த குண்டை எடுப்பார்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT