Published : 13 Mar 2016 05:49 PM
Last Updated : 13 Mar 2016 05:49 PM
ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கான சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு காக்கி அரைக்கால் டிரவுசருக்குப் பதிலாக பழுப்பு நிற முழு பேன்ட் வழங்கப்படும்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காக்கி டிரவுசர், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி, கருப்பு ஷூ அணிந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடக்கத்தில் காக்கி சட்டை இருந்தது. அது பின்னர் வெள்ளை சட்டையாக மாறியது. நீண்ட பூட்ஸ்களுக்கு பதில் லெதர் ஷூவும் அதன்பின்னர் ரெக்சின் ஷூவும் அனுமதிக்கப்பட்டன.
கடந்த 91 ஆண்டுகளாக இந்த உடைதான் பின்பற்றப்படுகிறது. இந்த சீருடையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ராஜஸ்தான் மாநிலம் நாகோரில் நடந்த ஆர்எஸ்எஸ்ஸின் அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் அதன் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அவர் கூறும்போது, "எங்கள் சீருடையில் மாற்றம் செய்துள்ளோம். காலத்துக்கேற்ப மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. காக்கி அரைக்கால் டிரவுசருக்குப் பதிலாக பழுப்பு நிற முழு பேன்ட் வழங்கப்படும்.
புதிய சீருடை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். உடற்பயிற்சிகளை செய்வதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள், தற்காப்புக் கலை பயில்பவர்கள்கூட முழு பேன்ட் அணிகின்றனர்" என்றார்.
'அடையாளம் தொலைந்துவிடாது'
ஆர்எஸ்எஸ் தொண்டர் என்றவுடனேயே அரைக்கால் டிரவுசர் அணிந்த ஒருவரே கண் முன் பிம்பமாக வரும் நிலையில் சீருடை மாற்றத்தால் அடையாளத்துக்கு பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்விக்கு, "ஆர்எஸ்எஸ் அமைப்பை அடையாளப்படுத்துவது இந்த சீருடைய மட்டுமே அல்ல. நிறைய பண்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம். எனவே, புதிய சீருடையும் ஒரு சில மாதங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடையாளமாகிவிடும். சீருடை மாற்றத்துக்குப் பின்னர் பழுப்பு நிற முழு பேன்ட் அணிந்தவர்களை ஆர்எஸ்எஸ் தொண்டர் என யாரேனும் நினைத்துக் கொண்டால் சங்கம் ஆச்சரியப்படாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT